இரட்டை புதிர்கள்



💥மகன்கள் மடிந்த போதும் மௌனம் காத்தவன்- ஆரோன்.

மேலாடை போன போதும் மானம் காத்தவன்- யோசேப்பு.


💥 மாடியில் உலாவி விழுந்து போனவன் இவன் - தாவீது.

மாடியிலிருந்து விழுந்து போனவன் - ஐத்திகு.


💥 வனாந்திரத்தில் வசைபாடி சாபமானவள் - மிரியாம்.

மலைப்பாதையில் புகழ்பாடி மனைவியானவள் - அபிகாயில்.


💥 குள்ளனாயிருந்தாலும் நல்லவனாய் மாறினான் - சகேயு .

கூடவே இருந்தும் கள்ளனாய் மாறினான் - யூதாஸ் காரியோத்.


💥 யுத்தகளம் சென்று பாடியவள் - தெபோராள்.

சுத்தியலைப் பிடித்து யுத்தத்தை முடித்தவள் - யாகேல்.


💥 தட்டிலே தலைவாங்கி தரங்கெட்ட வேசி - ஏரோதியாள்.

தப்பிக்க வழி காட்டி தலை காத்த வேசி - ராகாப்.


💥 தூதனைக் கண்டு பேசாத வாய் பேசியது - பிலேயாமின் கழுதை.

தூதன் உரைத்ததை நம்பாததால் பேசிய வாய் ஊமை ஆனது - சகரியா.


💥 எல்லாம் கூடும் யாராலே? தேவனாலே!

எல்லாம் கூடும் யாருக்கு ? விசுவாசிகளுக்கு!